இனி ‘தல’ வேண்டாம் – அஜித் குமார் அன்பு வேண்டுகோள்

இனி வரும் காலங்களில் என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ளதாக வெளிவந்துள்ள அறிக்கையில், “பெரு மரியாதைக்குறிய ஊடக,…

இனி வரும் காலங்களில் என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ளதாக வெளிவந்துள்ள அறிக்கையில், “பெரு மரியாதைக்குறிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

https://twitter.com/SureshChandraa/status/1465970025437667331?t=IBdqNZaZUfMvz8-rNzOiqQ&s=08

உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.