அமெரிக்காவின் ஒஹிகோவில் நடைபெற்ற பேரணியில் அதிபர் பைடனின் நிர்வாகம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பின்பு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக பேரணியில் கலந்து கொண்டார். ஒஹிகோவில் நடைபெற்ற இந்த பேரணியில் பேசிய டொனல்ட் ட்ரம்ப், 2020 தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக கூறினார்.
மேலும், குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதகரித்து வருவதாக கூறிய ட்ரம்ப், இந்த விவகாரம் தொடர்பாக ஜோ பைடன் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.







