சேலத்தில் காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் முகக்கவசம் அணியாமல் வந்தவருக்கு போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த நிலையில், அவரது நண்பருக்கு அபராதம் விதித்தாக கூறி, இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, செல்லபாண்டியன் மற்றும் அவருடன் இருந்த தமிழரசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.







