திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் இருப்பதற்கு திமுகவில் உள்ள சிலர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட பாமகவினருக்கு கலந்து முழக்கங்களை எழுப்பினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது..
“ 6188 சதுர கிலோ மீட்டர் கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் 18 ஒன்றியங்களை கொண்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வந்தவாசி தூசி பகுதிகளில் உள்ள மக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்திக்க வேண்டும்
என்றாலும் 120 கிலோமீட்டர் பயணித்து வர வர வேண்டியது உள்ளது.
இதனால் நேர விரயம் மற்றும் வெகு தூரம் கடந்து வர வேண்டிய நிலை உள்ளது எனவும் ஆரணியை தலைமை இடமாகக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தை பிரிக்க வேண்டும். தமிழக அரசு ஆட்சியில் அமர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியும் மாவட்டம் பிரிக்காமலே உள்ளது.
மாவட்டம் பிரிக்காமல் உள்ளதற்கு முக்கிய காரணம் திமுகவில் உள்ள குறுநில
மன்னர்கள் தான். இந்த மாவட்டத்தில் ஏவா வேலு உள்ளார். வேலூர் மாவட்டத்தில் துரைமுருகன் உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்சாலைகள் போன்ற எந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகளும் இல்லை.
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜோஷி நிலக்கரி ஏலப்பட்டியலில் மூன்று
நிலக்கரி சுரங்கங்கள் நீக்கப்படும் என டூவிட் செய்து இருந்தாரே தவிர ஏல
பட்டியலில் இருந்து எடுக்கப்படும் என தெரிவிக்கவில்லை. ஆனால் பாஜக உள்ளிட்ட பல
கட்சிகள் வெற்றி கொண்டாடி வருவது ஏற்புடையது இல்லை.
நான் தமிழக முதல்வரிடம் பாமக சார்பில் அளித்த மூன்று கோரிக்கைகள்
அடங்கிய கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிக்கை வெளியிடும்
வரை தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் பாமக சார்பில் நடத்தப்படும்” அன்புமணி ராமதாஸ் என தெரிவித்தார்.