25.5 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘மின்னும் மன்னை’ திட்டத்திற்கு முதலமைச்சர் அனுமதி தரவேண்டும்: டிஆர்பி ராஜா

சிங்காரச் சென்னை 2.0 பாணியில் மன்னார்குடி நகரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மின்னும் மன்னை திட்டத்திற்கும் முதலமைச்சர் முழு ஆதரவை தருவார் என திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து சிறப்பான துவக்க ஆட்டக்காரராக முதலமைச்சர் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இனிமேல் தமிழ்நாடு டெல்லியில் நெஞ்சை நிமிர்த்தி போராடும் என கூறி அவர் மேலும், சிங்காரச்சென்னை 2.0 திட்ட பாணியில், மன்னார்குடி நகரின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மின்னும் மன்னை திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு ஆதரவை தரவேண்டும்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவையில் எப்படி பேசவேண்டும் என அரைமணி நேரம் முதலமைச்சர் லெக்சர் எடுத்துள்ளார் எனக்கூறினார். மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளம் குறைவாக இருப்பதாகவும் அதனை உயர்த்தி தரவேண்டும் எனவும் அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy