சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதாவது;
”வெள்ள கட்டுப்பாடு முறைகளை வகுக்க அதில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மதுரவாயல் – சென்னை துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்டத்தை விரைவு படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவாக நிறைவேற்றப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் முதல் கட்டத்தை போலவே 50:50 செலவு பகிர்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை விரைவாக வழங்க வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும் . சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.”
இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.