ஆசிரியர் தேர்வு தமிழகம்

சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல்; பிரதமர் மோடி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சோவியத் ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிச தத்துவம் எப்படி இருக்க முடியாதோ அதேபோலதான், இந்த ஸ்டாலின் இல்லாமல் கம்யூனிஸ்ட் மாநாடு நடத்த முடியாது என்கிற உணர்வோடு என்னை நீங்கள் அழைத்துள்ளீர்கள் அதற்கு நன்றி.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளின் எண்ணங்களுக்கும் மதிப்பளிப்போம் என்று கூறினார். வரும் தேர்தல் லட்சியத்திற்கான, ஆட்சிமாற்றத்திற்கான தேர்தல் என்று குறிப்பிட்ட அவர், தனது ஊழலை மறைக்க அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி ஆட்சியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடைபெறுவதாக சாடினார். மேலும், அதிமுகவை அச்சுறுத்தி பாஜக தன்னை தமிழகத்தில் பலப்படுத்தி கொள்ள முயல்வதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

நியூஸ்7 தமிழின் “வாசிப்போம் நேசிப்போம்” – ஆர்வமுடன் கலந்து கொண்ட மாணவர்கள்

G SaravanaKumar

இலங்கையில் பொருளாதார நெருக்கடி; இந்திய அரசிடம் உதவி

G SaravanaKumar

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 7 பேர் கைது

EZHILARASAN D