உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப்பள்ளி வாளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் 9 ஆசிரியர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதால் தேர்தல் ஆணையம் தேதி அறிவித்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப் படும் எனக் கூறினார். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.








