திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி ஆளுநர் மீது பழி போடுகின்றனர் என திமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார்.
கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்ததாவது..
மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது. ஏனென்றால் மரபு அதுக்கு ஒத்து வராது அதே போல தான் எதிர்க்கட்சி தலைவர் அருகில் துணைத் தலைவரை அமர வைக்க வேண்டும் என்று அதிமுக கொடுத்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் காலம் கடத்தும் விடியா திமுக அரசின் சபாநாயகர் அப்பாவு. அப்பொழுது ஓபிஎஸ்யை எங்கே உட்கார வைக்க வேண்டும் என்று கேட்கிறீர்களானால் உங்கள் மடியில் அமர வைத்துக் கொள்ளுங்கள் அது உங்கள் இஷ்டம்.
தினந்தோறும் இரண்டு உயிர் பலியாகிறது, திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்துகின்றனர். இதற்கு கவர்னர் கையெழுத்து போட மறுக்கிறார் என அவர் மீது பழி போட்டு வருகிறார்கள்
அதனால் தான் அப்பொழுதே எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு திமுகவிற்கு ஆண்மை இல்லை ஆளுமையும் இல்லை” என ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தார்.
– யாழன்







