கூட்டாட்சி தத்துவத்தை விரும்பாதது திமுக என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் தேசிய
தலைவர் நட்டா இவ்வாறு கூறினார். மேலும், ராமநாதபுரம் சுவாமிகளின் அருளை பெற்ற நம்பிக்கையில் வந்துள்ளதாக தெரிவித்தவர், பாரம்பரியமிக்க திருவள்ளுவர் பிறந்த தமிழக பூமிக்கு வருவதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன் என்றும் கூறினார்.
மோடி கூட்டாட்சியை விரும்புபவர் என்ற JP நட்டா, தமிழ்நாட்டின் மீது மோடி மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார் என்றும், அதனால் தமிழக வளர்ச்சிக்கு அதிக நிதிகளை ஒதுக்கி தந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:கடந்த இரண்டு நாட்களாக இளைஞர்கள் மற்றும் ஏராளமான பெண்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் அனைவரும் பாஜகவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். திமுக கலாச்சாரமே லஞ்சம் தான். திமுக என்றாலே பண விநியோகம் வாரிசு அரசியல் கட்டப்பஞ்சாயத்து என்பதுதான்.
மோடியின் ஆட்சியில் நாடு மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் பல ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்?
இந்திய அளவில் பிஜேபி சமுதாயத்திற்கு பல வெற்றிகளையும் சாதகங்களையும்
கொண்டுள்ள கட்சியாகவும், நாட்டின் மிகவும் முக்கிய கட்சியாகவும் இருந்து
வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் மீதுள்ள அன்பின் காரணமாக அதன் வளர்ச்சிக்கு நாங்கள்
உறுதுணையாக இருப்போம். நேற்று எய்ம்ஸ் தொடர்பான சில வீடியோக்களை பார்த்தேன். அதுபற்றி முழுமையான கருத்துக்களை அண்ணாமலை உங்களிடம்
கூறுவார். தயவுசெய்து படித்த தலைவர்களை தேர்ந்தெடுங்கள்.
ரூ.164 கோடி எய்ம்ஸ் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் அது பற்றி முதலில் படித்திருக்க வேண்டும். இதற்காகத்தான் கூறுகிறேன் தமிழ்நாட்டில் படித்த தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நான் என்ன கூற வருகிறேன் என்று தெரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார் ஜே.பி.நட்டா.








