முக்கியச் செய்திகள் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் விலகல், கேப்டன் ஆனார் விஜய் சங்கர்

காயம் காரணமாக தினேஷ் கார்த்திக் விலகியதால், சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழ்நாடு அணி கேப்டனாக விஜய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி- 20 தொடரில், தமிழ்நாட்டின் சார்பாக விளையாடும் அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாநில தேர்வுக் குழு ,கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது. இதில் தமிழ்நாடு அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். துணைக்கேப்டனாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விஜய் சங்கர்

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது தினேஷ் கார்த்திக் முழங்காலில் காயமடைந்தார். அவர் இன்னும் குணமடையாததால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனால், விஜய் சங்கர் கேப்டன் பொறுப்பை வகிப்பார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆதித்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சியாச்சின் பனிமலையில் முதல் பெண் ராணுவ அதிகாரி – புதிய வரலாறு படைத்த கேப்டன் சிவா சவுகான்

G SaravanaKumar

அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?

Janani

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுமா? முதலமைச்சர் இன்று ஆலோசனை

Gayathri Venkatesan