திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மருத்துவ முறைகளின்றி இயற்கையான முறையில் வீட்டிலேயே குழந்தை பெற்றவர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மருத்துவ முறைகளின்றி பாரம்பரிய முறையிலான வீட்டிலேயே குழந்தை பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக சென்னை,கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு திடீரென காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து விழா ஏற்பட்டாளர்கள் காவல்துறையினரிடம் கேட்டும் அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் 3மணி நேரத்திற்கும் மேலாக அனுமதிக்காக காத்திருந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறை சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில் ஏற்கனவே இதுபோன்ற சங்கம நிகழ்ச்சிகளை கோயமுத்தூர்,வடலூர் போன்ற நகரங்களில் நடத்தியுள்ளோம்.அதனை தொடர்ந்தே இங்கு நடத்த தயாரானோம்,ஆனால் காவல்துறை மரபு வழியில் குழந்தை பெற்று கொள்வதை ஏதோ சட்ட விரோத செயல் போல நினைத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வைத்து அலைக்கழித்தனர்.இதனால் பொறுமை இழந்த நாங்கள் எங்களின் உரிமைக்காக சாலை மறியலில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.
—வேந்தன்