திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஜமீன் ஸ்ரீ பகவதி
அம்மன் கோயிலில் நடந்த தீமிதி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான, அருள்மிகு கரிகிரி வரதராஜப்பெருமாள் வகையறா ஹேவஸ்தானத்தை சேர்ந்த ‘ஸ்ரீ பகவதி அம்மன் கோயில்’ சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. கிராம தேவதையாக வழிபாடு நடைபெற்ற இக்கோயிலில் , கடந்த 1942 முதல் பங்குனி மாதந்தோறும் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
மேலும், பங்குனி 2-ஆம் வாரத்தில் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பால்குட ஊர்வலம், பூக்குழி இறங்குதல் வெகுவிமர்ச்சையாக நடைபெறும். இத்திருவிழா கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பூச்சொரிதல், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், நேற்று காலை மருங்காபுரி ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான
ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சய நாயக்கர், சிறப்பு பூஜைகளுடன் விழாவை
தொடக்கி வைத்தனர். பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில்
குழந்தைகள், பெரியவர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்குதலுக்கு ஒரு கிலோமீட்டர்
வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர், தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கோயிலின்
முன்பு ஊர் பொங்கல் நிகழ்ச்சி, அக்னி சட்டி எடுத்தல், முடி எடுத்தல் மற்றும் அன்னதானம்
ஆகியவை நடைபெற்றது. மாலையில் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருள் பெற்று
சென்றனர்.
—-கு.பாலமுருகன்