This News Fact Checked by ‘PTI’
ஓம்பிரகாஷ் குமார் என்ற இன்ஸ்டாகிராம் பயனர், ஜனவரி 26 அன்று டெல்லியில் இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதிக்கொண்டதைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். வைரலான வீடியோவில் “டெல்லி மெட்ரோ. நமோ பாரத் மெட்ரோ. இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதியதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது” என பதிவிட்டிருந்தார்.
தேடல் முடிவுகளை மேலும் பகுப்பாய்வு செய்ததில் ஃபர்ஸ்ட் போஸ்டின் ஃபேஸ்புக் இடுகையை நாங்கள் கண்டோம், அதில் வைரலான அதே வீடியோவைக் கொண்டிருந்தது. பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் இரண்டு டிராம்கள் மோதியதில் பலர் காயமடைந்ததாக அது கூறியது.
இதிலிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டு, பிடிஐ டெஸ்க் கூகிளில் முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது, இது ஜனவரி 12, 2025 தேதியிட்ட NDTVயின் அறிக்கையை எங்களுக்கு வழங்கியது: “சுரங்கப்பாதையில் டிராம்கள் மோதியதால் பிரான்சில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்” என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையின் ஒரு பகுதியில் ” கிழக்கு பிரெஞ்சு நகரமான ஸ்ட்ராஸ்பர்க்கில் இரண்டு டிராம்கள் சுரங்கப்பாதையில் மோதியதில் விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். பாரிஸுக்கு வெளியே பிரான்சின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான ஸ்ட்ராஸ்பேர்க்கின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த மோதல் ஏற்பட்டது. இந்த விபத்தில் உத்தேசமாக 36 பேர் காயமடைந்திருக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் தபரோட் கூறினார். அதே நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 50 பேர் காயமடைந்ததாக கூறுகின்றனர். முடிவு :
டெல்லியில் இரண்டு மெட்ரோ ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. இது தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் வைரலான வீடியோ பிரான்சில் நடந்தது டெல்லியில் அல்ல என்று முடிவு பிடிஐ டெஸ்க் கண்டறிந்தது.
Note : This story was originally published by ‘PTI’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.








