மகா கும்பமேளாவில் புனித நீராட வந்த பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தினார்களா?

மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

Did the police lathicharge devotees who came to take a holy dip at the Maha Kumbh Mela?

This News Fact Checked by ‘PTI

உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் குளிக்க வந்த பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதாக காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்த விசாரணையில் இந்த வைரல் கூற்று போலியானது என்று கண்டறியப்பட்டது. இந்த காணொளிக்கும் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. அசல் காணொளி ஜார்க்கண்டில் உள்ள தன்பாத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அங்கு ஒரு இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கலவரத்தை ஏற்படுத்திய மக்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

உரிமைகோரல்:

ஜனவரி 28 அன்று, ட்விட்டரில் (எக்ஸ்) ஒரு பயனர் இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “மகா கும்பமேளாவின் போது குளிப்பவர்களை உத்தரப் பிரதேச காவல்துறை இப்படித்தான் வரவேற்கிறது. இது உத்தரப் பிரதேச அரசின் மகா கும்பமேளா முறை, குண்டா ராஜ்” என்று பதிவிட்டுள்ளார். பதிவின் இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட் இங்கே காண்க.

மற்றொரு பயனர் ஃபேஸ்புக்கில், “உத்தரப்பிரதேச காவல்துறையினர் இப்படித்தான் வரவேற்பார்கள். மகா கும்பமேளாவில் குளிப்பவர்களை உத்தரப்பிரதேச காவல்துறை இப்படித்தான் வரவேற்கிறது. இது உத்தரப்பிரதேச அரசின் மகா கும்பமேளா முறையின் துரோகம்” என பதிவிட்டுள்ளார். பதிவுக்கான இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான கூற்றின் உண்மையைக் கண்டறிய, முதலில் கூகுள் லென்ஸ் மூலம் வீடியோவின் ‘கீ பிரேம்களை’ தலைகீழ் படத் தேடலை மேற்கொண்டபோது, இந்த வீடியோவை பாஜக தலைவர் தீபக் பிரகாஷின் சமூக ஊடகக் கணக்கில் கிடைத்தது.

ஜனவரி 2, 2025 அன்று, இந்த காணொளியை ஜார்க்கண்டிலிருந்து வந்ததாகக் கூறிப் பகிர்ந்த அவர், “ஜார்க்கண்டில் நீதி கோரும்போது உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பாருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார். முழு காணொளியையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இது தொடர்புடைய முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுள் தேடலை மேற்கொண்டபோது, இந்த சம்பவம் தொடர்பான செய்தி அறிக்கையை டைனிக் பாஸ்கரின் வலைத்தளத்தில் கிடைத்தது.

அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த சம்பவம் ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் நடந்தது, அங்கு பேங்க் மோர் காவல் நிலையப் பகுதியின் விகாஸ் நகரில் ஒரு இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினர். இறந்தவரின் குடும்பத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரு இளைஞனை கும்பலிடம் ஒப்படைக்கக் கோரினர் என்று அறிக்கை கூறுகிறது. காவல்துறையினர் நிறைய வற்புறுத்திய பிறகும் கும்பல் கேட்காததால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்த வேண்டியிருந்தது. முழு அறிக்கையையும் இங்கே படியுங்கள்.

ஜனவரி 1, 2025 அன்று ETV பாரத் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஜனவரி 1 அன்று தன்பாத்தின் பேங்க் மோர் காவல் நிலையப் பகுதியில் ஒரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பேங்க் மோர் காவல் நிலையத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, காவல் நிலையத்திற்கு வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடி, கலவரத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. பின்னர், நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். முழு அறிக்கையையும் இங்கே படியுங்கள்.

இதுவரை மேற்கொண்ட விசாரணையில், வைரலான காணொளி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து அல்ல, ஜார்க்கண்டில் உள்ள தன்பாத்தில் இருந்து வந்தது என்பது தெளிவாகிறது. பயனர்கள் தன்பாத் சம்பவத்தை மகா கும்பமேளாவுடன் இணைத்து சமூக ஊடகங்களில் தவறான கூற்றுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

முடிவு:

இந்த வைரல் காணொளி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து அல்ல, ஜார்க்கண்டில் உள்ள தன்பாத்தில் இருந்து எடுக்கப்பட்டது. தன்பாத்தில் நடந்த சம்பவத்தை மகா கும்பமேளாவுடன் இணைத்து பயனர்கள் தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Note : This story was originally published by ‘PTI and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.