முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பை உத்தவ் தாக்கரே சகோதரர் என குறிப்பிட்டாரா? அவர் பேசியது என்ன?

This News Fact Checked by ‘Vishvas News‘ மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பை தனது சகோதரர் என அழைத்ததாக பரவி வரும் வீடியோ குறித்த உண்மை நிலை குறித்து…

Did Mughal Emperor Aurangzeb refer to Uddhav Thackeray as his brother? What did he say?

This News Fact Checked by ‘Vishvas News

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பை தனது சகோதரர் என அழைத்ததாக பரவி வரும் வீடியோ குறித்த உண்மை நிலை குறித்து காணலாம்.

மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் தொடர்பான பரபரப்பு உச்சத்தில் உள்ளது. மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவும், நவம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஒரு கருத்து வைரலாகி வருகிறது. இதில் அவர் ஔரங்கசீப்பை தனது சகோதரர் என்று அழைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. 

வைரலான வீடியோவை விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்த போது அந்த வீடியோ திருத்தப்பட்டது தெரிய வந்தது. ஒரு உரையின் போது, ​​தாக்கரே காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஔரங்கசீப்பைக் குறிப்பிட்டார். அதே பேச்சு எடிட் செய்யப்பட்டு தவறான சூழலில் வைரலாக்கப்படுகிறது. சில பயனர்கள் அதை முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்புடன் இணைத்து வைரலாக்கி வருகின்றனர். 

உண்மை சரிபார்ப்பு:

சௌத்ரி சந்திர பால் சிங் என்ற பேஸ்புக் பயனர் நவம்பர் 5 அன்று ஒரு வீடியோவை பதிவேற்றி, “பால் தாக்கரே கி நாஸ்… அவுலத் கா பாய் ஔரங்கசெம்ப்” என்று குறிப்பிட்டிருந்தார். முகநூல் பதிவின் உள்ளடக்கம் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தது. அதை உண்மை என நம்பி மற்ற பயனர்களும் வைரலாக்கி வருகின்றனர். அந்த பதிவை இங்கே காணலாம்.

விஸ்வாஸ் நியூஸ் ஏற்கனவே ஒரு முறை வைரலான வீடியோவை ஆய்வு செய்தது. இதற்காக, முதலில் வைரல் வீடியோவின் பல கீஃப்ரேம்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பின்னர் இவை கூகுள் லென்ஸ் கருவி மூலம் தேடப்பட்டன. பின்னர் முழு வீடியோவையும் உத்தவ் தாக்கரேயின் முகநூல் பக்கத்தில் கண்டோம். இந்த வீடியோ 19 பிப்ரவரி 2023 அன்று நடந்த நிகழ்வின் போது Facebook-ல் நேரலை செய்யப்பட்டது. இந்த வீடியோவில் இருந்து சில பகுதிகள் எடிட் செய்யப்பட்டு தவறான சூழலில் வைரலாக்கப்படுகிறது.

இந்த முழு வீடியோவும் கவனமாகக் கேட்கப்பட்டது. 32 நிமிடங்களுக்குப் பிறகு, உத்தவ் தாக்கரே, “காஷ்மீர் ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு தனது குடும்பத்தினரை சந்திக்க வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் ஒருவர். விடுப்பு எடுத்துக்கொண்டு தனியாக செல்வதை அறிந்த பயங்கரவாதிகள் அவரை இடைமறித்து கடத்தினர். சில நாட்களுக்குப் பிறகு, அவரது சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. நாட்டுக்காக தியாகம் செய்த அவரை இப்போது என் சகோதரன் என்று சொல்கிறேன். பெயர் உங்களுக்கு தெரியும். அவர் பெயர் ஔரங்கசீப். மதத்தால் அவர் ஒரு முஸ்லிமாக இருக்கிறார். ஆனால் அவர் தனது நாட்டுக்காக தியாகம் செய்தார். அன்னை இந்தியாவிற்காக தனது உயிரை கூட கொடுத்தார். அவர் என் சகோதரர் இல்லையா? அவர் என் சொந்த சகோதரர்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மும்பையின் அந்தேரியில் வட இந்திய சமுதாயத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உத்தவ் தாக்கரே மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்வின் கவரேஜை ஏபிபி லைவ் இணையதளத்திலும் இடம் பெற்றுள்ளது. முந்தைய விசாரணையின் போது, ​இந்த வீடியோ குறித்து ராஜ்யசபா உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதியையும் தொடர்பு கொள்ளப்பட்டது. சிலர் அந்த வீடியோவை எடிட் செய்து, பொய்யான தகவல்களை பரப்பி வைரலாக்கியுள்ளனர் என கண்டறியப்பட்டது.

விசாரணையின் முடிவில், போலி போஸ்ட் செய்த பயனரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சவுத்ரி சந்திர பால் சிங் என்ற இந்த பயனர் புலந்த்ஷாஹரில் வசிக்கிறார். முன்னூறுக்கும் மேற்பட்டோர் இவரை பின்பற்றுகிறார்கள். 

முடிவு:

விஸ்வாஸ் நியூஸ் ஆய்வு செய்து வைரலான பதிவு போலியானது என கண்டறியப்பட்டது. மகாராஷ்டிரா தேர்தலுக்கு மத்தியில், உத்தவ் தாக்கரேவின் எடிட் செய்யப்பட்ட மற்றும் முழுமையடையாத வீடியோ, பொய்களை பரப்புவதற்காக பரப்பப்படுகிறது. உண்மையில், தாக்கரே காஷ்மீரில் வீரமரணம் அடைந்த அவுரங்கசீப்பை தனது சகோதரர் என்று அழைத்தார்.

Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.