‘தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதற்கு தெலங்கானா மக்கள் அனுதாபம் காட்டமாட்டார்கள்’ என கவிதா கூறினாரா?

This News Fact Checked by ‘Newsmeter’ தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டாலும் தெலங்கானா மக்கள் அனுதாபப்பட மாட்டார்கள் என்று பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா கூறியதாக இ-பேப்பர் கிளிப்பிங் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…

Did Kavitha say that the people of Telangana will not sympathize with the arrest of her family?

This News Fact Checked by ‘Newsmeter

தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டாலும் தெலங்கானா மக்கள் அனுதாபப்பட மாட்டார்கள் என்று பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா கூறியதாக இ-பேப்பர் கிளிப்பிங் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

எம்எல்சி கே.கவிதாவை மேற்கோள் காட்டியதாக கூறப்படும் இ-செய்தித்தாள் கிளிப்பிங் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த கிளிப்பிங்கின் படி, தான் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது தெலங்கானா மக்கள் தம்மீது அனுதாபம் காட்டவில்லை என்றும், தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) அல்லது சகோதரர் கே.டி.ராமராவ் கைது செய்யப்பட்டதற்காகவும் அனுதாபப்பட மாட்டார்கள் என்றும் கவிதா கூறினார்.

ஒரு நேர்காணலில், ‘பிஆர்எஸ் கட்சியை ஒரே ஒருவராகத்தான் வழிநடத்த முடியும்’ என்று எம்.எல்.சி. கவிதா கூறுவதாக தெரிகிறது.

இந்த இ-செய்தித்தாள் கிளிப்பிங் இந்த கருத்துகளை ஊடகங்களுடனான ‘சிட் சாட்’ என்று கூறுகிறது. தெலங்கானா குடிமக்கள் கல்வகுண்ட்லா குடும்பத்தின் மீது அக்கறையற்றவர்களாக இருப்பதாக உள்ளடக்கம் குற்றம் சாட்டுகிறது.

இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “பிஆர்எஸ் கட்சியை வழிநடத்தும் திறன் என்னிடம் மட்டுமே உள்ளது….” (தெலுங்கில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) என்ற தலைப்புடன் கிளிப்பிங்கைப் பகிர்ந்துள்ளார்.

இதே போன்ற ஒரு பதிவை இங்கே காணலாம். (காப்பகம்)

உண்மை சரிபார்ப்பு

நியூஸ்மீட்டர் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. இ-செய்தித்தாள் மற்றும் அதன் செய்திகள் போலியானவை என தெரிவித்துள்ளது.

மற்ற இ-பேப்பரைப் போலவே, ‘தெலங்கானா நியூஸ் டுடே டெய்லி’ கிளிப்பிங்கில் தலைப்பு, முக்கிய குறிப்புகள், லோகோவுடன் கூடிய பேனர், கட்டுரைக்கான தேதி மற்றும் இணைப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால், லிங்கை கிளிக் செய்தவுடன், அந்த பக்கத்தில் முடிவுகள் எதுவும் இல்லை என காட்டுகிறது.

இதுகுறித்து கூகுள் மற்றும் பிங்கில் முக்கிய வார்த்தைகளை தேடியபோது, ‘தெலங்கானா நியூஸ் டுடே டெய்லி’க்கான இ-பேப்பர் அல்லது இணையதளத்தின் எந்த தடயமும் கிடைக்கவில்லை. மேலும், Whois ஐப் பயன்படுத்தி, “telangananewstodaydaily” என்ற டொமைன் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மேலும் சரிபார்க்க, ‘தெலங்கானா நியூஸ் டுடே’ மற்றும் ‘தெலங்கானா நியூஸ் டுடே டெய்லி’ போன்ற தலைப்புகளுக்காக இந்தியாவிற்கான செய்தித்தாள்களின் இணையதளம் சரிபார்க்கப்பட்டது. இந்த தலைப்புகள் செய்தி எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இதன் அடிப்படையில், ‘தெலங்கானா நியூஸ் டுடே டெய்லி’ என்ற மின்-தாள் இல்லை என்பதும், அதன் செய்தித்தாள் துணுக்குகள் புனையப்பட்டவை என்பதும் தெளிவாகிறது.

மேலும் கவிதாவின் சமூக ஊடக பக்கங்கள் மற்றும் பொது அறிக்கைகள் போன்ற கருத்துக்கள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என தேடப்பட்டது. ஆனால், அறிக்கைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவரது சமீபத்திய பதிவுகள் முதன்மையாக அரசியல் நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றியதாக இருந்தது.

மேலும், தெலங்கானா நியூஸ் டுடே டெய்லி’ என்ற போலி செய்தித்தாள் போலியான செய்திகளை பரப்புவது இது முதல் முறையல்ல எனவும் கண்டறியப்பட்டது.

‘தெலங்கானா நியூஸ் டுடே டெய்லி’ என்ற பெயரில், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பற்றி தவறான தகவல்களைப் பரப்பும் இதுபோன்ற கிளிப்பிங்குகள் முன்பே பரப்பப்பட்டன. கே.சி.ஆர் மற்றும் கே.டி.ஆர் பற்றி தவறான கூற்றுக்கள் குறித்த பல வைரல் கிளிப்பிங்குகளை நியூஸ்மீட்டர் அடையாளம் கண்டுள்ளது. இந்த கிளிப்பிங்குகள் தெலுங்கு மாநிலத்தின் நடப்பு விவகாரங்கள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன.

எனவே, தெலங்கானா குடிமக்கள் குறித்து எம்எல்சி கே.கவிதா பேசியதை மேற்கோள் காட்டி வைரலான செய்தித்தாள் கிளிப்பிங் போலியானது என்று முடிவு செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.