பரமக்குடியில் பள்ளி மாணவி குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஐந்து பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மைச் செய்தி : வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
நேற்று பரமக்குடியில் ஆயிர வைசிய சபையின் சார்பில் வியாபாரிகள் உணவகங்கள், மளிகை கடைகள், பேக்கரிகள், நகை கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ,இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் பொருட்டு சைலேந்திர பாபு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







