தை மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் வருகை தந்து, மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு…

பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் வருகை தந்து, மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமிக்கு 8 நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வார்கள். மலைப்பகுதிகளில் வானம் மேகமூட்டம் மற்றும் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

இந்நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு தை மாதம் பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் 22 ஆம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர் வருகை தந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் மலைப் பகுதியில் நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும், இரவில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.