ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் பிரவீன் ராஜை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து
இழிவுப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜக இளைஞரணி சமூக ஊடக
பொறுப்பாளர் பிரவின்ராஜ் என்பவரை ராசிபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் அதிகாலை 2 மணியளவில் கரூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ்.
இவர், தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளராக உள்ளார். அவரின் வீட்டில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கரூர் க்ரைம் போலீசார் கைது
செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன்ராஜ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நேரடி தொடர்பில் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் காங்கிரஸ், திமுக கட்சிகளை விமர்சித்து வந்த நிலையில் காங்கிரஸ் இது தொடர்பான புகாரின் பேரில் கரூர் சைபர் கிரைம் போலீசார் பிரிவின் ராஜை நள்ளிரவு கைது செய்து கரூர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கைது சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.