வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு/வடகிழக்கு காற்று தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் மீது நிலவி வருகிறது. இதன் காரணமாக …

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு/வடகிழக்கு காற்று தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் மீது நிலவி வருகிறது. இதன் காரணமாக  நவ. 11, 14 மற்றும் 15-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நவ. 14 மற்றும் 15-ம் தேதிகளில் கடலோர ஆந்திரா, ஏனாம் மற்றும் ராயலசீமாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மற்றும் தெற்கு வளைகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: “இறுதி தருணம் வரை நோயாளிகளுக்கான மருத்துவ சேவை தடைபடாது!” – காஸா மருத்துவமனை நிர்வாகம் உருக்கம்

தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.