33 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு கோரி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

குறுவை சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமீபத்தில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர்கள் மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்படாததால் கருகி முற்றிலும் சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடிக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருகும் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் உரிய நீரை பெற்று தர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திட வேண்டும். நெற்பயிர் காப்பீடு செய்வதை தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

– வெற்றிவேல்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading