கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 37,379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல தொற்றுக்கு 1,71,830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடந்த 24 மணிநேரத்தில், 37,379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிஷோடியா தெரிவித்துள்ளார்.
அதேபோல அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும், போக்குவரத்தை பொறுத்த அளவில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் முழு எண்ணிக்கையில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் அலுவலகங்களை பொறுத்த அளவில் பாதி ஊழியர்கள் வீ்ட்டிலிருந்து பணி புரிய வழிவகை செய்ய வேண்டும் என்றும் மனிஷ் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் டெல்லியின் தொற்று பாதிப்பு விகிதமானது 5%ஐ கடந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 5,500 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று பாதிப்பு விகிதம் 8.5%ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக இன்று காலை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லியில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேர ஊரடங்கும் மற்றும் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.