28.3 C
Chennai
September 30, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்

டெல்லியில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்றைய தினத்தில் 6,430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும், கொரோனாவால் சனிக்கிழமை அன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 337 ஆக உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இப்போது நான்காவது முறையாக முழு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் 23ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram