நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைத்து வருவதாகவும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 157 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது. இந்நிலையில், நேற்று முதல் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 688 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று 3 ஆயிரத்து 324 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 157 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 82 ஆயிரத்து 345 ஆக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதித்து ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 38 ஆயிரத்து 976ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19 ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 லட்சத்து 2 ஆயிரத்து 170 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,95,588 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83,82,08,698 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.