நிழல் முதலமைச்சராக உதயநிதி மற்றும் சபரீசன் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வேப்பேரி காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த தலைவர்கள் பெயரை நான் கொச்சை படுத்த விரும்பவில்லை எனவும்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காஷ்மீரில் உள்ளவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் நன்றாக தெரியும் என விமர்சனம் செய்தார். மேலும், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கப்படும் பணி தற்போது நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த செயலை பொது மக்களே விரும்ப மாட்டார்கள் என கூறினார். அத்தோடு கூடிய விரைவில் தமிழ்நாட்டை ‘கருணாநிதி நாடு’ என்று கூட மாற்றலாம் என விமர்சித்தார்.
மேலும், சின்னத்திரை நடிகை சித்ரா விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ‘மடியில் கனம் உள்ளவர்களுக்கு பயம் இருக்கும்’ என கூறினார். தமிழ்நாட்டின் நிழல் முதலமைச்சராக சபரீசன் மற்றும் உதயநிதி செயல்படுகின்றனர் என சாடிய அவர், கனிமொழிக்கு எந்த ஒரு ரோலும் இல்லை எனவும் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு? – பாடநூல் கழக தலைவர் லியோனி விளக்கம்’
தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் திமுக மீது வெறுப்பில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளதகவும், மக்கள் கொதித்து போய் உள்ளதகவும் தெரிவித்தார். அடுத்த தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள் என குறிபிட்டு பேசிய அவர், தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது எனவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது என கூறினார்.
மேலும், திமுக மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது என விமர்சனம் செய்த அவர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான் என கூறினார். தொடர்ந்து பேசிய திமுகவின் கொள்கை விளக்கங்கள் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.