கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் மாரியம்மன் கோயில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் கரணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதித்து உள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால்
மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கபடி வீரர் வினோத் பலியானார்.
வினோத் என்பவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ்,
கலையரசன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கபடி வீரர் கரணம் அடிக்கும் காட்சி
தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம்
அடிக்கும் போது கபடிவீரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.







