அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்- ஃபிஃபா நடவடிக்கை

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது. சுப்ரீம் கோர்ட் நியமித்த CoA ஆல் இந்திய கால்பந்து கூட்டமைப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரஃபுல்…

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது.

சுப்ரீம் கோர்ட் நியமித்த CoA ஆல் இந்திய கால்பந்து கூட்டமைப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர் பிரஃபுல் படேல். இவர் தனது பதவிக் காலம் முடிவடைந்த பிறகும் பதவியில் நீடித்து வருகிறார்.

இதையடுத்து, ஃபிபா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்திய கால்பந்து நிர்வாகக் குழுவின் நிர்வாகம் ஜனநாயகத் தேர்தல் நடைமுறையில் தினசரி விவகாரங்களில் முழுக் கட்டுப்பாட்டை மீட்டெடுக்கும் போது மட்டுமே இடைநீக்கம் நீக்கப்படும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 11 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள யு17 மகளிர் உலகக் கோப்பையை நடத்தும் உரிமை இந்தியாவிடம் இருந்தது. தற்போதைய நடவடிக்கையால் இந்தியாவில் யு17 மகளிர் உலகக் கோப்பையை நடத்த முடியாது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரஃபுல் படேல் மீது மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்வாகிகள் குழு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய கால்பந்து நிர்வாகக் குழுவின் நிர்வாகக் குழுத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. எனினும், அவரை இடைநீக்கம் செய்வதற்கான முடிவை ஃபிஃபா எடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.