ட்ரான்ஸ்ஃபார்மரில் சிக்கி இறந்த மீன் ஒன்றிற்காக பரிதாபப்பட்டு காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாக நீடித்த இந்த மின் தடை காரணமாக மின்சாரத் துறை பணியாளர்கள் தீவிரமாக சோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து மின்மாற்றியில் மீன் ஒன்று சிக்கியிருப்பதை கண்டு அதனை அகற்றி பின் நிலைமையை சரி செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மின்மாற்றியில் மீனைக் கொண்டு வந்து போட்டது ஒரு பறவைதான் எனவும் இரையாக மீனை கொத்திக் கொண்டு வந்த பறவை மின்மாற்றியில் போட்டிருக்கலாம் எனவும் நியூ ஜெர்சி மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த மின் வெட்டு குறித்து சேரிவில்லே காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..
“நியூஜெர்சியில் மின் தடையால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். அதேநேரத்தில் ட்ரான்ஸ்பார்மரில் சிக்கி மீன் இறந்ததை யாரும் மறந்து விடக் கூடாது. இறந்து போன கிகில்லியன் மீன் ஒரு குடும்பத் தலைவர். அந்த மீன் ஆயிரக்கணக்கான மீன்களின் தந்தை“ என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் கிகிலியன் மீனை கொத்தி ட்ரான்ஸ்ஃபார்மரில் போட்டது ஒரு பறவை. அது கடைசியாக தெற்கு நோக்கி பறந்து சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனைக் கண்டால் பிடித்துவிட வேண்டும். ஏனெனில் அதனிடம் எந்தவித பயங்கர ஆயுதங்களும் இல்லை. ஆனால் அது மிகவும் மோசமானதாக இருக்கக் கூடும். கவனமாக இருக்க வேண்டும்.
அந்த பறவை குறித்த தகவல் கிடைத்தால் மீன்கள் குறித்த வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்கும் ஜான்சில்வருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்வதாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.