கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..! அதிர்ச்சியில் மக்கள்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிராவுத்தர் குளம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும்…

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிராவுத்தர் குளம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நீர் தேங்கப்படுவதால் சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீர் உயர்ந்து வருகிறது. இந்த குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் மீன்களின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.