கொடைக்கானலில் ‘சிட்டி வியூ’ பகுதியில் காட்டுத் தீ பற்றியதால் பலநூறு ஏக்கர் அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகின.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை காலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் துவங்கும் முன்பு கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் தீ தடுப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபடுவது மற்றும் தீ தடுப்பு குறித்து கிராம மக்களுக்கு பயிற்சி வழங்குவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு காட்டு தீ குறித்த எந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீ தடுப்பு மேலாண்மையிலிருந்து நூற்றுக்கும் அதிகமான ஆட்களை இரவு , பகல் என 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்து வருவாா்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டு அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் எடுக்கவில்லை என சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், கொடைக்கானல் “சிட்டி வியூ” பள்ளத்தாக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில் அரியவகை மூலிகை செடிகள் விலை உயா்ந்த மரங்கள் எரிந்து நாசமாகின.
—கா.ரு்பி