திரைப்பட பாணியில் துபாயிலிருந்து ரூ. 24,62,400 மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த நபரிடம் சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
துபாயில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் வழக்கம் போல் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. இந்நிலையில், அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மதுரை சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படியுங்கள் : “கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால்தான் கடந்த 20 ஆண்டுகளில் 6180 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
அதன் அடிப்படையில் துபாயில் இருந்து காலை 10:30 மணி அளவில் மதுரை விமான
நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த நபரை அழைத்துச் சென்று சோதனை செய்ததில் வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வயிற்றில் இருந்த 16 கேப்சூல் உருண்டைகளை மருத்துவர்
மேற்பார்வையில் இனிமா கொடுத்து வெளியே எடுக்கப்பட்டது. அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பேஸ்ட் வடிவிலான தங்கம் இருப்பது தெரியவந்தது.
அந்த கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ. 24,62, 400 என்றும் அதன் எடை 360 கிராம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அயன் திரைப்பட பாணியில் துபாயிலிருந்து 24,62,400 ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் நூதன முறையில் கடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







