அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார்!

குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர்…

குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற
உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் நகர மன்ற தலைவர் சௌந்திரராஜன் தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் புகார் மனு
அளித்தனர்.

அப்போது பேசிய நகர மன்ற தலைவர் சௌந்திரராஜன், மாநில அளவில் புகழ்பெற்ற
ஶ்ரீகெங்கையம்மன் சிரசு திருவிழாவிற்கு தமிழ் நாடு மற்றும் அண்டை மாநிலங்கள்
இருந்து பல லட்சம் மக்கள் வருகை தர உள்ளனர். இதற்காக நகராட்சியின் சார்பாக 11 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்தும், நகரின் பல இடங்களில் புதியதாக 600 மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மற்றும் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டு உள்ளது.

இதுபோல, பக்தர்கள் நலன் கருதி நகராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் செய்திருக்கும் நிலையில். அடையாளம் தெரியாத சில நபர்கள் நகர மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற
உறுப்பினர்கள் குறித்து மிகவும் அவதூறான தகவல்களை “நோட்டீஸ் போல போட்டோஷாப் செய்து “ சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

எனவே, இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியாத்தம் நகர
காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம் என குடியாத்தம் நகராட்சி மன்ற
தலைவர் கூறினார்.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.