இந்திய அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 4.01 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4,187 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரொனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரவு ஊரடங்கு, சில பகுதிகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4.01 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை 2,18,92,676 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,187 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் 2,38,270 பேர் இதுவரை கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். தற்போது 37,23,446 பேர் இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 1,79,30,960 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.







