சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சீனாவில் ஏராளாமானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் நுழைந்துவிட்டது. இந்தியாவிலும் 3 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். பிரதமர் மோடியும் கொரோனா நிலைமை பற்றி டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்து இன்று முதல் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.