கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7ம்…

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நடந்த முடிந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச் சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது. ரூ 4000 நிவாரண நிதியாக வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக ரூ2000 வழங்கும் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச்செயலகத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் 15ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் முதல்கட்டமாக வழங்கப்படும், ரூ,2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம் தொடங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.