நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்துதொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு…

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்துதொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் அங்கு பணியாற்றும் அனைவருக்கும், கொரோனா கண்டறியும் பரிசோதனை சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளி வந்த நிலையில், 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாடாளுமன்ற மொத்த பணியாளர்களில் 62 சதவீதம் ஆகும். இதனால் திட்டமிட்டப்படி பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

இதனிடையே குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின்படி, ஹைதராபாத்தில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டதாக ட்விட்டரில், வெங்கையா நாயுடுவின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு விரைவில் குணமடைய விழைகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.