கொரோனா தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாளாக இறப்பு எண்ணிக்கை இன்று பூஜ்ஜியத்தை தொட்டுள்ளது.
கொரோனா தொற்றானது கடந்த 2020 ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. 2020ம் ஆண்டின் இறுதியில் முதல் அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே சென்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. கல்வி நிலையங்கள் தொடர்ந்து அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலங்கள் மூடப்பட்டன. ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே வேலையை தொடர அனுமதிக்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்ந்து 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா முதல் அலை குறைந்து ஓரிரு மாதங்களில் அடுத்த அலை தொடங்குவது என இதுவரை மூன்று அலைகள் நாட்டு மக்களை ஆட்டிப்படைத்துள்ளது. இந்த நிலையில் 2020ம் ஆண்டின் இறுதியில் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு 2021ம் ஆண்டு தொடக்கம் முதல் கொரோனா தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கொரோனா உயிரிழப்புகள் குறைந்தாலும், தொற்று பரவல் இருந்துகொண்டே இருக்கிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்குப் பிறகு 3ம் அலை கடந்த டிசம்பர் மாதம் தொடர்ந்து ஜனவரி வரை நீடித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக தொற்றுபரவல் குறைந்துவரும் நிலையில் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றால் தினசரி உயிரிழப்பு 1000த்தை தாண்டி பதிவாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2020ம் ஆண்டில் மார்ச் மாதம் 1 உயிரழப்பு ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 19 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. மேலும் இதுவரை தொற்றால் 38,023 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்பு முதன்முறையாக உயிரிழப்பு பூஜ்ஜியத்தை தொட்டுள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.