காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி தஹியா உள்பட மேலும் 4 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022 இல் இந்திய அணியினர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022 ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 பிரிவுகளில் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டிக்கான தேர்வு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பஜ்ரங் புனியா, ரவி தஹியா ஆகியோருடன் மேலும் நான்கு மல்யுத்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கூறுகையில், இது எனது மூன்றாவது காமன்வெல்த் விளையாட்டு. நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். அதற்காக நான் கடினமாக உழைக்கிறேன். அனைத்து விளையாட்டு வீரர்களும் காமென்வெல்த் போட்டிக்காக நன்றாகத் தயாராகிவிட்டோம், நாங்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன், ஏனெனில் எங்களது செயல்திறன் நன்றாக உள்ளது என்று கூறினார்.
ரவி தஹியா கூறுகையில், நாங்கள் விளையாடி நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்வதை உறுதிசெய்வதே எங்கள் முயற்சியாக இருக்கும். இது எனது முதல் காமன்வெல்த் விளையாட்டு, மேலும் இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் நாட்டுக்காக தங்கப் பதக்கங்களை வெல்ல அனைவரும் முயற்சி செய்வார்கள் என கூறினார்.