சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தியதில், கலஷன், கரப்ஷன், கமிஷன் நடந்து இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு சரிவர செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் போதை பழக்கம் அதிகரித்து வருவதாக கூறிய அவர், கொலை, கொள்ளைகளின் கூடாரமாக சென்னை மாறி இருப்பதாகவும் விமர்சித்தார். இளைஞர்கள் இடையே தற்போது போதை பழக்கம் தலைதூக்கி நிற்பதாகவும் அவர் சாடினார்.
மேலும் அதிமுக ஆட்சியில் கண்ணாடி போல் இருந்த கோயம்பேடு சந்தை தற்போது கூழாங்கல் போல் மாறிவிட்டதாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தியதில் கலக்ஷன், கரப்ஷன், கமிஷன் நடந்திருக்கலாம் என்றும் அது குறித்து விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்றும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்