முக்கியச் செய்திகள் தமிழகம்

’COME LET’S RUN’ – அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் வெளியீடு

139 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 24 மாநிலங்களில் ஓடி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய COME LET’S RUN என்ற புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை புத்தக காட்சியில் நடைபெற்றது. புத்தகத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்லக் கூடியவர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து சாட்சியாக இந்த புத்தகம் இருக்கும் என்று கூறினார். 139 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இதுவரை 24 மாநிலங்களில் ஓடி இருப்பதாகவும் தெரிவித்த அவர், அந்த அனுபவங்கள் பற்றிய புத்தகத்தின் ஆங்கிலப் பதிவை தற்போது வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அவருக்குப் பின் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புத்தகம் கண்டிப்பாக இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அசாமில் கடும் நிலநடுக்கம்!

Jeba Arul Robinson

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி

Web Editor

ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: SpaceX நிறுவனம் சாதனை!

Jayapriya