ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்களின் வாரிசுதாரர்களை, முதலமைச்சர்…

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்களின் வாரிசுதாரர்களை, முதலமைச்சர் இன்று நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாயை வழங்கினார். ​

அதன்படி, மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சோளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த வீரர் பாலமுருகனின் தாயார் குருவம்மாள், கிருஷ்ணகிரி ராகிமானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த வீரர் சந்தோஷின் தாயார் சித்ரா ஆகியோரிடம், தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இதுபோல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ அதிகாரி ஆனந்தின் மனைவி பிரியங்கா நாயர், திருப்பத்தூர் காக்கங்கரை கிராமத்தைச் சேர்ந்த மறைந்த வீரர் சபரிநாதனின் தாயார் மனோன்மணிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கினார். ​இந்நிகழ்வின்போது, அரசு பொதுத் துறைச் செயலாளர் ஜகந்நாதன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.