தமிழகம் செய்திகள் விளையாட்டு

திருவிழாவில் தவறவிடப்பட்ட பணம் – போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவன்!

எருது விடும் திருவிழாவில் வெற்றி பெற்ற காளையின் பரிசு பணம் கீழே கிடந்ததை கண்டெடுத்து 8-ம் வகுப்பு மாணவன் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார்.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பநகரில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் மொத்தம் 70 காளைகள் கலந்து கொண்டன. முதல் பரிசாக ரூ 2லட்சம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு மொத்தம் ஐம்பது பரிசுகள் வழங்கப்பட்டது.  இதில் 25 வது காளைக்கு பரிசு 8,500-ஐ கவரில் வைத்து விழா குழுவினரால் வழங்கப்பட்டது.
இந்த பரிசு கவரை காளை உரிமையாளர் தவறவிட்டு சென்றுவிட்டார். இதனை கண்டெடுத்த சசிமதன் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் பணியிலிருந்த காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். பணத்தை ஒப்படைத்த மாணவனுக்கு விழா குழுவினர் மற்றும் காவல் ஆய்வாளர், பொதுமக்கள் என  அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிய டிஜிபி சைலேந்திரபாபு.

EZHILARASAN D

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம்!

Jeba Arul Robinson

“கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – சுகாதாரத்துறை செயலாளர்

Jeba Arul Robinson