அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு. அத்தகைய வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்பு அலாதியானது.
மதுரையின் ராணி மீனாட்சி, சுந்தரேஸ்வரரை மணம் முடிக்கும் திருக்கல்யாண வைபவம் சில 100 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் மரபுமாறாமல் நடைபெற்று வருகிறது. கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வு, சித்திரா பௌர்ணமி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது. ஆண்டு தோறும் அழகர் ஆற்றில் இறங்கினாலும், அழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்கதர்களுக்கு அருளும் அழகை காண, ஆயிரம் கண்போதாது என்கின்றனர் மதுரை மக்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரைக்கு வடக்கே இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அழகர்மலையில் வீற்றிருக்கும் அழகர் தனது தங்கை மீனாட்சி திருமணத்திற்கு தங்க குதிரையில் சீர்வரிசைகளுடன் மதுரையை நோக்கி கம்பீரமாக புறப்படுகிறார். வரும் வழியில், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சாற்றி கொள்ளும் அழகர், வைகையை நோக்கிய தனது பயணத்தை தொடர்கிறார்.
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த கடோச்க்கதனின் தாகத்தை தீர்க்க, சிவபெருமான் உருவாக்கிய நதிதான் வைகை என்ற கதை உண்டு. வழிநெடுக்க பக்தர்களின் மண்டக படிகளில் எழுந்தருளும் வைபவத்தை முடித்து விட்டு வரும் அழகரை வரவேற்றவாரே திரளான மதுரை மக்கள் அழகருடன் வருவது கொண்டாட்டத்தின் அழகை கணுமுன் நிறுத்தும் நிகழ்வாக உள்ளது. திருமணத்திற்கு வரும் அழகர்,கள்ளர் கொண்டய்,கொண்டையில் குத்தீட்டி, கையில் வளைதடி, இடுப்பில் ஜமாத்தாடு என்று மெருகேற்றும் தோரணையுடன் வைகையில் இறங்குகிறார்.
ஆனால் அதற்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் முடிந்துவிட இதை கேள்வியுற்ற அழகர் தான் இல்லாமலே திருமணம் முடிந்து விட்டதால் கோபித்துக்கொண்டு வைகையில் இருந்து திரும்ப செல்வதாக ஒரு கதையும் இதற்கு உண்டு. புனை கதைகள் ஆயிரம் சொன்னாலும் அழகர் ஆற்றில் இறங்குவது ஆன்மீக நிகழ்வு மட்டுமல்லாது ஒரு கலாச்சார திருவிழா என்பதால் இருவேறு கருத்தில்லை.