மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயிலில், மே ஒன்றாம் தேதி முதல், சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 14ம் நாள் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் ஒருபகுதியாக, வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து, கோயில் பால்குடங்களுடன் புறப்பட்டு, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் ஊர்வலமாக வேப்பிலை மாரியம்மன் கோயிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடங்கள் சுமந்து வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர். குழந்தை வரம், பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டிவந்து, நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்தனர். அதன்பின்னர், சுமார் நான்கு லட்சம் லிட்டர் பாலால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் தொன்மையான தர்மராஜா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில், விநாயகப் பெருமான், திரௌபதிஅம்மன், கிருஷ்ணர், நகுலன், சகாதேவன், அர்ஜூனன், பீமன் ஆகியோர் எழுந்தருளி வருகின்றனர். சிறப்புமிக்க இக்கோயிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா