25.5 C
Chennai
November 29, 2023
முக்கியச் செய்திகள் குற்றம்

எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேசவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 26 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் 16 வயது மகளுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தேசவிளக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர், நேரில் சென்று குழந்தை திருமணத்தை நடத்தக்கூடாது என எச்சரித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கிராம நிர்வாக அலுவலரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத குடும்பத்தினர், வலுக்கட்டாயமாக சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர், தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியை திருமணம் செய்ததாக செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy