இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியைச் நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உதவிடுமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.








