இரும்பு பைப் விழுந்து சத்தீஸ்கர் மாநில தொழிலாளி உயிரிழப்பு

பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் அழ்துளைக்கிணறு அமைக்கும் பணியின் பொழுது இரும்பு பைப் விழுந்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மேக்நாத் என்பவர் உயிரிழந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டி சத்திரம் பகுதியில், மேல் சிறுணை கிராமத்தைச்…

பாலுச்செட்டி சத்திரம் பகுதியில் அழ்துளைக்கிணறு அமைக்கும் பணியின் பொழுது இரும்பு பைப் விழுந்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி மேக்நாத் என்பவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், பாலுச்செட்டி சத்திரம் பகுதியில், மேல் சிறுணை கிராமத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் என்பவர் வீடு கட்டும் இடத்தின் அருகில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை போர்வெல் உரிமையாளர் செல்வராஜ் என்பவரிடம் வேலையை ஒப்படைத்துள்ளார். இன்று செல்வராஜ் தனது வேலையாட்கள் மற்றும் இயந்திரத்துடன் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது பணியில் போர்வெல் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக இயந்திரத்திலிருந்து 20 அடி உயரம் கொண்ட இரும்பு பைப் கழண்டு பணி செய்துகொண்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளியான மேக்நாத் என்பவர் மீது விழுந்ததில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலுச்செட்டி சத்திரம் போலீசார் விரைந்து மேக்நாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அஜாக்கிரதையாக இருந்த போர்வெல் இயந்திர உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மணி இருவரையும் கைது செய்துள்ளனர்.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.