44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு ஓபன் பிரிவில் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்த மூன்று அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
ஓபன் பிரிவில் நான்காம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணி இன்று 8-ஆம் இடத்தில் உள்ள ஈரானுடன் மோதுகிறது. ஓபன் பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய பி அணி இன்று முதல் இடத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
அண்மைச் செய்தி: ‘சென்னை மடுவின்கரையில் 3.27 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் உந்து சக்தி நிலையம்’
மகளிர் பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணி மூன்றாம் இடத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் அணியுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியில் இந்த மூன்று அணிகளுமே வெற்றியைப் பதிவு செய்தால் தங்கப்பதக்கத்திற்கான ரேசில் இருப்பார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.








