செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இறுதி சுற்று இன்று நடக்கிறது. இதில் இந்தியாவிற்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதி சுற்றான 11 ம் சுற்று ஆட்டம் இன்றைய
தினம் நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஓபன் பிரிவில் புள்ளி பட்டியலில் 4 ம்
இடத்தில் உள்ள இந்திய ஏ அணி 5 ம் இடத்தில் உள்ள அமெரிக்கா அணியுடன் மோத உள்ளது.
புள்ளி பட்டியலில் 3 ம் இடத்தில் உள்ள இந்திய ஓபன் பி அணி 9 ம் இடத்தில் உள்ள
ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது. இந்திய ஓபன் சி அணி கஜகஸ்தான் அணியுடன் மோத உள்ளது.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் ஏ அணி 7 ம் இடத்தில் உள்ள
அமெரிக்கா அணியுடன் மோத உள்ளது. இந்திய மகளிர் பி அணி ஸ்லோவாக்கியா
அணியுடனும், இந்திய மகளிர் சி அணி கஜகஸ்தான் அணி உடனும் மோத உள்ளது.
இன்றைய இறுதி சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி வெற்றியை பதிவு செய்தாலே
தங்கப்பதக்கத்தை வெல்லும்,ஓபன் பிரிவில் இந்திய பி அணி வெற்றியை பதிவு
செய்தால் வெள்ளி அல்லது வெண்கல பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
ஒரு வேளை ஓபன் பிரிவில் முதல் இரண்டு இடத்தில் இருக்கக்கூடிய உஸ்பெகிஸ்தான்
மற்றும் அர்மேனியா அணிகள் இன்றைய ஆட்டத்தில் தாங்கள் ஆடக்கூடிய எதிரணியிடம்
தோல்வியை சந்தித்து இந்திய ஓபன் பி அணி எதிர்த்து ஆடக்கூடிய ஜெர்மன் அணியை
வீழ்த்தும் பட்சத்தில் இந்திய ஓபன் பி அணிக்கு தங்கப்பதக்கத்திற்கான வாய்ப்பு
பிரகாசமாக இருக்கிறது.







